சாலை விபத்தில் காயமடைவோருக்கு.. இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுகள் பாதியாகக் குறைக்க மத்திய அரசு இப்போது இலவச சிகிச்சை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் காயமடைவோர் தனியார் மருத்துவமனைகளிலும் முதல் 7 நாட்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மிகவும் விரிவான சாலை கட்டமைப்பைக் கொண்ட நாடு. நமது நாட்டின் கிட்டதட்ட அனைத்துப் பகுதிகளும் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், நாடு முழுக்க முக்கியமான சாலைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் மறுபுறம் இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே 2030ம் ஆண்டுகள் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு இலவசச் சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் 7 நாட்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.50 லட்சம் வரை இலவசச் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எந்தச் சாலையிலும் மோட்டார் வாகனம் தொடர்பான எந்தவொரு சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபரும் இதில் பலனடையலாம்.. அவரது வருமானம், பிரிவு உட்பட எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. சாலை விபத்தில் காயமடையும் எந்தவொரு நபரும் இந்த கேஷ்லெஸ் சிகிச்சை முறைக்குத் தகுதி பெறுவார்கள் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு இதேபோல ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. நம்மை காக்கும் 48 என்ற அந்தத் திட்டத்தில் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தில் ஒரு வாரம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications