”ஆளுநர்கள்” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல- விளாசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
டெல்லி: மாநிலங்களின் "ஆளுநர்கள்" என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல; வழக்குகள் தொடருவதற்கு முன்னரே நிலுவை மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தார். இதற்கு எதிராக பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, பஞ்சாப் மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. பஞ்சாப் சட்டசபையை கூட்டுவதற்கும் கூட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முட்டுக்கட்டையாக உள்ளார் என பஞ்சாப் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆளுநர்களுக்கு குட்டு: இந்த வழக்கு விசாரணையின் போது, ஆளுநர்கள் என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்னரே ஆளுநர் செயல்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு கூட ஒப்புதல் தர வேண்டும் என்பதற்காக மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டுமா? அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும். இதேபோல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளும் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. பஞ்சாப் மாநில அரசின் 7 நிலுவை மசோதாக்கள் மீதான நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 மாநிலங்களும் வழக்கு: பஞ்சாப் மாநில அரசைப் போலவே தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநில அரசுகளும் ஆளுநர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பது, சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையில் சுட்டிக்காட்டி இருந்தார். இதனால் பஞ்சாப் மாநில அரசின் வழக்கு மீதான நவம்பர் 10- விசாரணையின் போது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகள் தொடர்ந்த வழக்குகளும் விசாரணைக்கு வரக் கூடும் என தெரிகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications