100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக மத்திய அரசு ரூ20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ரூ20 லட்சம் கோடி திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக விவரித்து வருகிறார்.

Govt. allocate additional Rs 40,000 crore to MGNREGS

இன்றும் 5-வது நாளாக நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைசார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இன்றும் 100 நாள் வேலை திட்டம் தொடர்பாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

100 நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ61,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ40,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.

இதேபோல் கல்வித்துறை தொடர்பாகவும் பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். கல்விக்கான சேனல்களை அதிகரிப்பது, ஆன்லைனில் கல்வி கற்பது உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார்.

Recommended Video

    அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்- நிர்மலா சீதாராமன் அதிரடி

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+