பெட்ரோல், டீசல் விலை குறையப் போகுது.. வரப்போகும் குட் நியூஸ்? தீவிர ஆலோசனையில் மத்திய அரசு.. ஆஹா
டெல்லி: கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி உள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கச்சா எண்ணய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அதன்பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக சரிந்து வந்தாலும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தான், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் உயர்ந்துள்ளதால், நுகர்வோர்களும் லாபம் அடையும் வகையில் விலை குறைப்பை அமல்படுத்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விரைவில் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவிலும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் அளிக்கும் விதமாக விலை குறைப்பை கொண்டு வரலாம் என அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படமால் இந்த விலைக்குறைப்பை கொண்டு வருவது தொடர்பாக துறை சார்ந்த இரு அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை நடைபெறுகிறதாம்..
சர்வதேச சந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை1 சதவிகிதம் குறைந்து பேரல் ஒன்றின் விலை 70 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது. ஒரு டாலர் குறைந்து பேரல் ஒன்று 72.75 டாலராக உள்ளது. தற்போது விலை சரிவை சந்தித்து இருப்பதால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரிப்பதை தாமதிக்கலாம் என்று தெரிகிறது.
அடுத்த மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த நாடுகள் திட்டமிட்டு இருந்தன. லிபியா நாட்டின் எண்ணெய் சர்வதேச சந்தையில் சந்தைக்கு வந்துள்ளதால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவை சந்தித்து இருக்கிறது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications