மிகப்பெரிய விலை.. இந்தியாவுக்கு வாய்ப்பே இல்லை.. 'ஹெர்ட் இம்யூனிட்டி' குறித்து மத்திய அரசு
டெல்லி: இந்தியாவை போன்ற பெரிய நாட்டிற்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (ஹெர்ட் இம்யூனிட்டி) ஒரு யுக்தி சார்ந்த தேர்வாகவோ அல்லது விருப்பமாகவோ இருக்க முடியாது என்று மத்திய அரசு வியாழக்கிழமை கூறியது.
ஏனெனில் இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தி( ஹெர்ட் இம்யூனிட்டி) என்பது பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பின்னர் மற்றும் பல பேர் இறந்த பின் வருவதாகவும், எனவே தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வரும் வரை சமூக விதிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே சாத்தியமான வழியாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 15,83,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 34,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 52,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது தினசரி வேகம் அண்மைக் காலமாக 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 700க்கும் அதிகமாக உள்ளது.

தடுப்பூசி இல்லை
தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று நோயை தடுப்பது என்பது இந்தியாவில் மிகவும் சவாலான காரியமாக உள்ளது. அத்துடன் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்படுவதால் சிகிச்சை அளிப்பதும் சவாலாக உள்ளது. இதனால் அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வைக்க போராடி வருகிறது.

தொற்று குறைந்ததன் பின்னணி
இந்நிலையில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே மற்றும் குறைந்தபோன தொற்று வீதங்களின் அடிப்படை பார்த்தால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் வாதங்களின் பின்னணியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக டெல்லி மற்றும் சென்னை, மும்பையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

மிகப்பெரிய விலை
இது குறித்து மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், " இந்தியா போன்ற மக்கள்தொகை உள்ள நாட்டில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு யுக்தி சார்ந்த தேர்வாகவோ அல்லது விருப்பமாக இருக்க முடியாது. இது மிகப்பெரிய விளைவுகளுக்கு பின் வருவதாகும்.இதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.
Recommended Video

தடுப்பூசி வரும் வரை
இதன் பொருள் என்னவென்றால், பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பலர் இந்த செயலில் இறந்துவிடுவார்கள். அதன்பின்னரே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வரும். . எனவே தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வரும் வரை சமூக விதிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே சாத்தியமான வழியாக இருக்கும் என்றார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications