தாலி கட்டும் நேரத்தில் மணமகன் செய்த காரியம்.. உறைந்து போன மணப்பெண்.. வைரல் வீடியோவை பாருங்க!
டெல்லி: தாலி கட்டும் வேளையில் மணமகன் போட்ட குத்தாட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
இந்தியாவை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் கொரோனா தொற்று மனிதர்களின் மகிழ்ச்சியை முற்றிலுமாக சிதைத்து விட்டது.

உற்சாகத்தில் மிதக்கும் வீடுகள்
பணிச்ச்சுமை, பொருளாதார நெருக்கடி என பல்வேறு குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தாலும், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடிய காலம் வீட்டில் நடைபெறும் விஷேசங்கள்தான். அதிலும் ஒரு வீட்டில் கல்யாணம் வந்து விட்டால் அந்த வீடே ஒரு வாரம் களைகட்ட தொடங்கி விடும். நண்பர்கள், உற்றார் உறவினர்கள் சூழ்ந்து நிற்க வீடே உற்சாகத்தில் மிதக்கும்.

வேட்டு வைத்த கொரோனா
ஆனால் இப்போது இந்த உற்சாகத்துக்கும் கொரோனா தடை போட்டு விட்டது. தற்போது அதிபட்சமாக 50 பேருடன் கட்டுப்பாடுகளுடன்தான் திருமண விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் வட இந்தியாவில் நடந்த திருமண விழாவில் மணமகன் செய்த காரியம் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கான சடங்குகள் நடந்து கொண்டிருக்கிறது.

குத்தாட்டம் போட்ட மணமகன்
மணமகன்-மணமகள் இருவரும் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களை சுற்றி உறவினர், நண்பர்கள் இருக்கிறார்கள். அப்போது தாலி காட்டும் நேரத்தில் வித்தியாசமான செய்கை செய்த மணமகன் திடீரென எழுந்து நடனமாட ஆரம்பித்து விட்டார். ஆட்டம்னா சாதாரணமான ஆட்டம் இல்லை. குத்தாட்டம். இதை பார்த்து மணமகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

என்ன காரணமாக இருக்கும்?
சுற்றி இருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் பரிதவித்தார்கள். சில நிமிடம் ஆடிய மணமகன் உட்கார்ந்து விட்டார். ஒரு வேளை மணமகன் 90 கிட்ஸ் ஆக இருப்பாரோ? அட நமக்கும் கல்யாணம் நடக்க போகிறதே என்ற சந்தோஷத்தில் ஆடி இருப்பாரோ? இல்லை மணமகள் ஏதோ சொல்லி அந்த உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு இருப்பாரோ? என்று திருமணத்துக்கு வந்தவர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications