குஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்
டெல்லி: ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் குஜராத்தில் ரிசார்ட் அரசியல் ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது 65 எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.
ஜூன் மாதம் 19ஆம் தேதி குஜராத்தில் ராஜ்யசபா எம்பி தேர்தல் நடைபெறுகிறது. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவுக்கு 3 எம்பிக்கள், காங்கிரசுக்கு இரண்டு எம்பிக்கள் தேர்வாகும் நிலைமை இருந்தது.

இந்த நிலையில் அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பாஜக இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் எஞ்சியுள்ள 65 எம்எல்ஏக்களை மூன்று குழுக்களாகப் பிரித்து மூன்று வெவ்வேறு ரிசார்ட்களில் இன்று தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் ரிசார்ட்களில் தங்கியிருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஒரு ரிசார்ட், ராஜ்கோட் நகரத்தில் உள்ள ரிசார்ட், வதோதரா நகரில் உள்ள ரிசார்ட் என மூன்று ரிசார்ட்கள் இதற்காக புக் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் அளித்த பேட்டியில், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 20 கோடி ரூபாயை தருவதற்கு பாஜக பேரம் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின்போதும் கட்சியின் மூத்த தலைவரான அகமது பட்டேலை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் கடும் பாடுபட வேண்டியதாயிற்று. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக வளைத்துப் போட்டது.
கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டனர். டிகே சிவகுமார் தலைமையில் ஆபரேஷன் தாமரை நடக்கவிடாமல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, எப்படியோ ஒரு வழியாக அகமது பட்டேல் வெற்றிபெற வைக்கப்பட்டார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications