‛இடிக்குதே’ சரத்பவார் கூறிய அந்த வார்த்தை! இஸ்ரேல் போரில் வெளியுறவு துறையிடம் இருந்து விலகிய மோடி?
டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போரில் பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இரு கருத்துகளுக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், மோடி இஸ்ரேல் பக்கமும், வெளியுறவுத்துறை பாலஸ்தீனம் பக்கமும் இருப்பது போல் தெரிகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சாடியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் கசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் தேதி கடும் மோதல் தொடங்கியது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்' இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது.

ஒரே நேரத்தில் 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இஸ்ரேலை குலைநடுங்க வைத்தது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார்.
இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது. அதேபோல் இஸ்ரேலிலும் பலி எண்ணிக்கை 1000யை கடந்துள்ளது. மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நாளுக்கும் நாள் இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது வலுவாகி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா உள்பட பல நாடுகள் போரை கைவிட்டு அமைதி திரும்ப பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளன.
இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மோதலில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளார். கடந்த 7 ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்தபோதே அதனை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அதன்பிறகு பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினார். இக்கட்டான இந்த சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என கூறினார்.
இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் குறித்து கூறியிருந்தார். அதன்பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அரிந்தம் பாக்சி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஆகியவை ஒரேபோன்ற கருத்தை பிரதிபலித்தன.
அதாவது ‛‛இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான சரத்பவார் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பிரச்சனையில் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியோர் தங்களின் நிலைப்பாட்டை வேறுபடுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பாலஸ்தீன விவகாரத்தை இந்தியா எப்போதும் ஆதரித்துள்ளது என்பதை வெளிவிவகாரத்து அமைச்சகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. நாங்கள் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக இருப்போம் என்பதை அது காட்டுகிறது. ஆனால் பிரதமர் மோடி இஸ்ரேல் பக்கம் முழு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளோம்.
அரசு ஒரு நிலைப்பாட்டிலும், அமைச்சகம் இன்னொரு நிலைப்பாட்டிலும் இருப்பது இதுதான் முதல் முறை. மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை என்பது தீவிரவமானது. அதோடு சென்சிட்டிவானது. இதனால் இந்த விஷயத்தில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பிற நாடுகளின் கருத்துகளை புறக்கணிக்க முடியாது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications