ராமேஸ்வரத்தில் விரைவில் பிரம்மாண்ட அனுமன் சிலை.. குஜராத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: 108 அடியிலான அனுமன் சிலை ராமேஸ்வரத்தில் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி முதல் சிலை வடக்கு பகுதியான சிம்லாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் பணிகள் தொடங்கின. 2ஆவது சிலை குஜராத் மாநிலம் மோர்பி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவின் மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரம் கொண்ட இந்த சிலையை அமைக்கும் பணி ரூ 10 கோடி மதிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத்தில் உள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அப்போது மோடி பேசுகையில் உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை இன்று மோர்பியில் திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
அனுமன் அனைவரையும் தனது பக்தியால், தனது சேவையால் இணைக்கிறார். அனைவரும் உத்வேகம் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்திலும் நாட்டின் கிழக்கு பகுதியான மேற்கு வங்கத்திலும் அனுமன் சிலைகள் நிறுவப்படும் என நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Inaugurating a 108 feet statue of Hanuman ji in Morbi, Gujarat. https://t.co/6M0VOXXPmk
— Narendra Modi (@narendramodi) April 16, 2022












Click it and Unblock the Notifications