ஆம் ஆத்மிக்கு ஹர்பஜன் சிங் கல்தா! பகவந்த் மான் அவ்வளவு போன் அடிச்சும் எடுக்கல.. பாஜக பார்த்த வேலை!
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகவ் சதா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோருடன் இணைந்து ஹர்பஜன் சிங்கும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
முன்னதாக ஹர்பஜன் சிங்கை சமாதானப்படுத்த, பஞ்சாப் முதல் பகவந்த் மான் தொடர்ந்து போன் அடித்திருக்கிறார். ஆனால், அதை அவர் வேண்டும் என்றே அவாய்ட் செய்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங் கட்சியை விட்டு விலகக்கூடும் என்ற தகவல் கிடைத்ததும், அவரை சமாதானப்படுத்த முதல்வர் முயன்றதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது ஹர்பஜன் சிங் மும்பையில் ஐபிஎல் வர்ணனையாளராகப் பணியில் இருப்பதால், அவர் போனை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
என்னதான் இப்படியான காரணங்கள் சொல்லப்பட்டாலும், முதல்வர் போன்ற மூத்த தலைவர்கள் போன் அடிக்கும்போது, அதற்கு ரெஸ்பான்ஸ் இல்லையெனில், கட்சி தாவல் உறுதியாகிவிட்டது என்றே அர்த்தம்.
கடந்த 2022ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்ததற்காக, ஆம் ஆத்மி இவ்வளவு செய்து கொடுத்தாலும், ஹர்பஜன் சிங் கட்சி பணிகளில் பெரியதாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
கிரிக்கெட்டில், குறிப்பாக மேட்ச் வர்ணனையில் கவனம் செலுத்தி, கட்சி பணிகளை தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் கட்சி எடுக்கும் முக்கியமான முடிவுகளின் பின்னணி குறித்து அவருக்கு தெரியவில்லை. எனவே, ஒவ்வொரு முடிவிலும் உடன்படாமல் இருந்திருக்கிறார்.
இப்படியாகத்தான் அவர் இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு, தற்போது ஹர்பஜன் சிங் போன்ற நட்சத்திர முகங்கள் விலகிச் செல்வது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications