கொரோனா தொடர்பான.. உச்சநீதிமன்ற வழக்கில் இருந்து.. அதிரடியாக விலகிய மூத்த வழக்கறிஞர்.. ஏன் தெரியுமா?
டெல்லி: உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்த கொரோனா தொடர்பான வழக்கில் இருந்து மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அதிரடியாக விலகி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக கடுமையாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
கொரோனா தடுப்பூசிக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பிரச்னைகள் குறித்து, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பல்வேறு மாநில நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் தீர்ப்புகள் குழப்பமாக இருப்பதால் கொரோனா தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டோ(இன்று ஓய்வு பெற்று விட்டார்) தலைமையில் நீதிபதிகள் அமர்வு முடிவெடுத்தது. ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்துகள் வினியோகம், தடுப்பூசி வழங்கும் முறைகள் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் 'அமிகஸ் கியூரியாக' வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவின் உதவியை நாடியுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஹரிஷ் சால்வே 'அமிகஸ் கியூரியாக' நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் தரப்பில் அதிருப்தி நிலவியதாக கூறப்படுகிறது. பல நீதிபதிகள் ஹரிஷ் சால்வேவை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் எடுத்த கொரோனா தொடர்பான வழக்கில் 'அமிகஸ் கியூரி' நியமனத்தில் இருந்து ஹரிஷ் சால்வே அதிரடியாக விலகி உள்ளார்.
"அய்யோ".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!
இது தொடர்பாக மூத்த நீதிபதி ஹரிஷ் சால்வே கூறுகையில், ' இந்த நீதிமன்றம் ஆராயும் மிக முக்கியமான வழக்கு இது. இந்த வழக்கு ஒரு நிழலின் கீழ் முடிவு செய்யப்படுவதை நான் விரும்பவில்லை.எனக்கு எந்த சைட்ஷோவும் தேவையில்லை என்று கூறினார். மூத்த நீதிபதி ஜெனரல் துஷர் மேத்தா ''சால்வே இந்த வழக்கில் இருந்து விலக வேண்டாம். இதுதுபோன்ற அழுத்தம் தந்திரங்களுக்கு யாரும் அடிபணியக்கூடாது" என்று தெரிவித்தார்.