விவசாயிகளை ஒட்டுண்ணி என்று பிரதமர் விமர்சிக்கலாமா? மாஜி மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ஆவேசம்
டெல்லி: தேசத்தின் விவசாயிகளை ஒட்டுண்ணி என்று பிரதமர் மோடி விமர்சிக்கலாமா? என லோக்சபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளத்தின் சார்பில் பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று டெல்லி விவசாயிகளின் போராட்ட படங்களை எடுத்துக் காட்டி ஹர்சிம்ரத் கவுர் பேசியதாவது:

டெல்லி எல்லைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசன நாளில் நிராயுதபாணிகளான விவசாயிகள் மீது லத்திகளை கொண்டு தாக்கியது மத்திய அரசு. கண்ணீர்புகை குண்டுகளை வீசியது மத்திய அரசு.
விவசாயிகள் யாரும் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் டெல்லியில் போராடவில்லை. பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையை உறுதி செய்வதில் துணை நின்றார். இப்போது 360 டிகிரி தலைகீழ் மாற்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி அவரது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் இருந்து இதுவரை விவசாயிகள் போராட்டம் பற்றி எதுவுமே பேசவில்லையே..
விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என அழைக்கிறார் பிரதமர் மோடி. அந்த விவசாயிகள்தான் உங்கள் மேஜைகளில் உணவுப் பொருட்களை கொண்டுவந்து வைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டில் யாரேனும் உண்மையை எழுதினால் அவர்களை சிறையில் அடைக்கின்ற கொடுமை நடக்கிறது. இவ்வாறு ஹர்சிம்ரத் கவுர் பேசினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications