விவசாயிகளை ஒட்டுண்ணி என்று பிரதமர் விமர்சிக்கலாமா? மாஜி மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ஆவேசம்
டெல்லி: தேசத்தின் விவசாயிகளை ஒட்டுண்ணி என்று பிரதமர் மோடி விமர்சிக்கலாமா? என லோக்சபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளத்தின் சார்பில் பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று டெல்லி விவசாயிகளின் போராட்ட படங்களை எடுத்துக் காட்டி ஹர்சிம்ரத் கவுர் பேசியதாவது:

டெல்லி எல்லைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசன நாளில் நிராயுதபாணிகளான விவசாயிகள் மீது லத்திகளை கொண்டு தாக்கியது மத்திய அரசு. கண்ணீர்புகை குண்டுகளை வீசியது மத்திய அரசு.
விவசாயிகள் யாரும் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் டெல்லியில் போராடவில்லை. பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்த விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச விலையை உறுதி செய்வதில் துணை நின்றார். இப்போது 360 டிகிரி தலைகீழ் மாற்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி அவரது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் இருந்து இதுவரை விவசாயிகள் போராட்டம் பற்றி எதுவுமே பேசவில்லையே..
விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என அழைக்கிறார் பிரதமர் மோடி. அந்த விவசாயிகள்தான் உங்கள் மேஜைகளில் உணவுப் பொருட்களை கொண்டுவந்து வைக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டில் யாரேனும் உண்மையை எழுதினால் அவர்களை சிறையில் அடைக்கின்ற கொடுமை நடக்கிறது. இவ்வாறு ஹர்சிம்ரத் கவுர் பேசினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications