சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய வேளாண் அமைச்சராக 2011-ல் பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபரை 8 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசார் இன்று கைது செய்தனர்.
2011-ல் சரத் பவார், மத்திய வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது ஹர்வீந்தர் சிங், அவரை கன்னத்தில் அறைந்தார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அப்போது போலீசார் கைது செய்தனர்.
பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஹர்வீந்தர் தலைமறைவாகிவிட்டார். 2014-ம் ஆண்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஹர்வீந்தர் சிங்கை தலைமறைவு குற்றவாளி எனவும் பிரகடனம் செய்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஹர்வீந்தர் சிங்கை வடமேற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் திங்கள்கிழமையன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications