ரோஹித் சர்மாவை கைது பண்ணீட்டாங்களா?..போலீசுடன் சோகமாக இருக்கும் படத்தை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, போலீஸ் அதிகாரியுடன் சோகமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்து ரோஹித் சர்மாவை கைது செய்துவிட்டார்களா? என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கின்றனர்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2-வது டி 20 போட்டி நேற்று முன் தினம் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரை வென்றது.

காவல்துறை அதிகாரியுடன் ரோகித்
இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் பதிவிட்டு வந்தனர். இதற்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, காவல்துறை அதிகாரி பொன்ஜித் தோவாராவுடன் நிற்கும் புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவியது. ரோஹித் சர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை துணை ஆணையரான பொன் ஜித் தோவ்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

சிரித்த முகத்துடன் இல்லையே
பெஸ்ட் ஆப் லக்.. கண்டிப்பாக ஒரு சதம் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் 11 ஆயிரம் லைக்குகளும் மற்றும் ஏராளமான கமெண்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். அதிலும் சில நெட்டிசன்கள், ரோஹித் சர்மா கைது செய்யப்பட்டாரா? என்றும் சந்தேகம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். சில நெட்டிசன்கள் கூறுகையில், ''இந்த படத்தில் யாருமே சிரித்த முகத்துடன் இல்லையே ஏன்?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

கைது செய்து விடாதீர்கள்
அதேபோல், மற்றொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், ரோஹித் சர்மா கைது செய்யப்பட்டது போல் தெரிகிறது? என்று பதிவிட்டு இருந்தார். அதேபோல், ரோஹித் சர்மா ஏன் இவ்வளவு சீரியசாக இருக்கிறார்... எங்கள் ரோஹித் சர்மாவை கைது செய்து விடாதீர்கள்.. என்று கருத்துக்களில் கலகலப்பாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருவர் இந்த படத்தை முதலில் பார்க்கும் போது ரோஹித் சர்மா கைதாகிவிட்டார் என தான் நினைத்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

டேவிட் மில்லர் சதம் வீண்
நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் டேவிட் மில்லர் சதம் அடித்து கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு தோல்வியே மிஞ்சியது. எனினும், 47 பந்துகளில் 106 ரன்கள் அடித்து மிரட்டிய டேவிட் மில்லரும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார்.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications