வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர்
டெல்லி: HDFC வங்கியின் தலைவராக இருந்த அத்தனு சக்கரவர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் தனது ராஜினாமா கடிதத்தில், வங்கியில் நடக்கும் சில நடைமுறைகள் தனது நெறிமுறைகளுக்கு ஒத்துவரவில்லை என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவே இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் மிகப் பெரிய தனியார் வங்கியாக இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்தால் எஸ்பிஐ-க்கு பிறகு சுமார் ரூ. 12.97 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன், எச்டிஎஃப்சி வங்கி இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹெச்.டி.எஃப்.சியின் பங்குச்சந்தை செயல்பாடு சிறப்பாக இல்லை.

அத்தனு சக்கரவர்த்தி ராஜினாமா
இதற்கிடையே HDFC வங்கியின் தலைவரும், சுதந்திர இயக்குநருமான அத்தனு சக்கரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பொதுவாக இதுபோல மிக முக்கிய பதவியில் இருக்கும் நபர்கள் இப்படி திடீரென ராஜினாமா செய்ய மாட்டார்கள். அது வங்கியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து, அடுத்த தலைமையைத் தேர்வு செய்யும் வரை உடன் இருப்பார்கள். ஆனால், சக்கரவர்த்தி உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.
அதை விட அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கிய பதவிகளில் இருப்போர் ராஜினாமா செய்யும்போது, அதற்கான காரணங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், சக்கரவர்த்தி அதுபோல எந்தவொரு தெளிவான காரணத்தையும் கூறவில்லை. மாறாக மறைமுகமாக ஏதோ சில விஷயங்களைச் சொல்ல வருவது போலக் குறிப்பிட்டிருந்தார்.
சில நடைமுறைகள்
வங்கியின் சீரமைப்பு, நியமனம் மற்றும் ஊதியக் குழுத் தலைவருக்குச் சக்கரவர்த்தி இது தொடர்பாகக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர், "வங்கியின் சில நிகழ்வுகளும், நடைமுறைகளும் எனது தனிப்பட்ட மதிப்புகளுக்கும் நெறிமுறைகளுக்கும் முரணாக உள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் நான் கவனித்த சில நிகழ்வுகளும் நடைமுறைகளும் எனது தனிப்பட்ட விழுமியங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் முரணாக உள்ளன. இதுவே எனது ராஜினாமா முடிவுக்கு அடிப்படை காரணம். மேற்கண்ட காரணங்களைத் தவிர ராஜினாமாவுக்கு வேறு முக்கிய காரணங்கள் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து என்ன
திடீர் ராஜினாமாவுக்கான குறிப்பிட்ட விவரங்களைச் சக்கரவர்த்தி வெளியிடவில்லை. எனினும், வங்கியின் செயல்பாடுகள் தொடர்பாக இயக்குநர்கள் குழுவில் சில காலமாகவே கருத்து வேறுபாடுகள் நிலவியதாகக் கூறப்படுகிறது. சக்கரவர்த்தியின் திடீர் பதவி விலகலைத் தொடர்ந்து கிவி மிஸ்ட்ரியை எச்டிஎஃப்சி வங்கியின் இடைக்காலப் பகுதிநேரத் தலைவராக நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று மார்ச் 19 முதல் மூன்று மாத காலத்திற்கு கிவி மிஸ்ட்ரி ஹெச்டிஎஃப்சி வங்கியை வழிநடத்துவார். மிஸ்ட்ரி இதற்கு முன்பு எச்டிஎஃப்சி லிமிடெட்டின் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்?
HDFC வங்கியில் இருந்து விலகியுள்ள அத்தனு சக்கரவர்த்தி குஜராத் கேடரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். இவர் கடந்த 2019-20ல் மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரத் துறை செயலாளராகப் பணியாற்றினார். இதற்கு முன் குஜராத் அரசில் நிதித்துறை செயலாளராகவும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தது குறிப்பிடத்தக்கது.
சக்கரவர்த்தியின் இந்த திடீர் ராஜினாமாவால் HDFC வங்கி பங்குச்சந்தையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. காலை 11.30 மணியளவில் சுமார் 41 ரூபாய் சரிந்து, அதாவது கிட்டத்தட்ட 5% சரிந்து, ரூ.801க்கு அதன் பங்குகள் வர்த்தகமாகின.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்














Click it and Unblock the Notifications