Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛பாபர் ரோடு’’.. போர்ட்டை பார்த்ததும் ‛அயோத்யா மார்க்’ என ஸ்டிக்கர் ஒட்டிய ஹிந்து சேனா - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ‛பாபர் ரோடு' என எழுதி வைக்கப்பட்ட போர்ட்டில் ஹிந்து சேனா அமைப்பினர் இன்னொரு பெயரில் ஒட்டிய ஸ்டிக்கரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் தொடர்பாக சுமார் 500 ஆண்டு பிரச்சனை என்பது நடந்து வந்தது. வன்முறை, கலவரம், சட்ட போராட்டம் என இந்த பிரச்சனை என்பது பல்வேறு வடிவங்களில் நடந்து வந்தது.

Hindu sena activists put a sticker of Ayodhya marg on babar road in delhi

இறுதியாக கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட சுமார் 10 ஆயிரம் வரை பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காலையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அதாவது டெல்லியில் பாபர் ரோடு உள்ளது. இந்த ரோட்டை குறிக்கும் வகையில் பாபர் ரோடு என ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் அந்த போர்டு மீது ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.

அந்த ஸ்டிக்கரில் அயோத்யா மார்க் என எழுதப்பட்டு இருந்தது. அதாவது ‛பாபர் ரோடு' என்பதை மறைத்து அயோத்யா மார்க் என குறிக்கும் வகையில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த ஸ்டிக்கரை கிழித்தனர்.

பாபர் ரோடு எனும் போர்ட் மீது இந்த ஸ்டிக்கரை ஹிந்து சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அயோத்தி தொடர்பான பிரச்சனை என்பது ராமர் கோவில், பாபர் மசூதி என்ற பெயர்களிடம் தான் உருவானது. அயோத்தி ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டியதாக இந்து அமைப்பினர் தெரிவித்ததோடு மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என கூறினர்.

மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து வன்முறைகள் வெடித்த நிலையில் பெரிய அளவில் பிரச்சனை உருவானது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. தற்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+