Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புடினின் Poop Suitcase வரலாறு! 1949-ல் மலம் கழித்த சீன தலைவர்! ஆய்வு செய்த ரஷ்ய அதிபர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மலத்தை வைத்து உடல்நலத்தை கண்டறிந்து விடுவார்களோ என்ற அச்சம், விளாடிமிர் புடினுக்கு வர காரணமே 1949 ஆம் ஆண்டு சீன அதிபருக்கு நடந்த அந்த சம்பவம்தான் என்கிறார்கள்.

Putin Poop Suitcase

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக இரு நாட்கள் வந்திருந்தார் விளாடிமிர் புடின். எந்த நாட்டிற்குச் சென்றாலும் புடின் கழிக்கும் மலத்தை அவரது பாதுகாப்பு படையினர் சேகரித்து அதை சூட்கேஸில் போட்டு மாஸ்கோவுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள்.

மலத்திற்கு கூடவா இத்தனை பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மலத்தை வைத்து புடினுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளை அந்த நாட்டு உளவுத் துறை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

1999ஆம் ஆண்டு முதல்

1999ஆம் ஆண்டு இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதாம் பொதுவாக மலத்தை ஆய்வு செய்து அந்த நபருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்ற அளவுக்கு கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள்.

மலத்தை வைத்து என்ன செய்யலாம்

புடின் அஞ்சும் அளவுக்கு இதுவரை வேறு யாருடைய மலத்தை வைத்தாவது இது போன்று உடல்நல பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: வரலாற்றில் மலத்தை வைத்து மற்றொரு நாட்டு தலைவரை கண்காணித்த செயலும் ரஷ்யாவில் தான் நடந்தது. 1949 ஆம் ஆண்டு சீன நாட்டு தலைவர் மா சே துங் (Mao Zedong) ரஷ்யாவுக்கு நட்புமுறை பயணமாக வந்த போது பத்து நாட்கள் தங்கினார்.

ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் (Josef Stalin)

அப்போது ரஷ்ய அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி, சீன நாட்டு தலைவர் கழித்த மலத்தை ரஷ்ய உளவு அமைப்பு, பரிசோதனை செய்தனர். அக்காலத்தில் இருந்து தலைவர்களின் மலத்தை பரிசோதனை செய்து அவர்களை அங்குலம் அங்குலமாக ஒற்றரிந்து கூறவென தனி ஆய்வுக்கூடத்தை ரஷ்ய அதிபர் நடத்தி வந்தார்.

அமைதியான நபர்

ஒருவரது மலத்தில் ட்ரிப்டோஃபேன் அதிகமாக வந்தால் அவர் அமைதியான நபர் என்றும் அவரது மலத்தில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் முறையாக தூக்கமில்லை என்றும் அறியப்பட்டது. இது குறித்து அறிந்த மா சே துங் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். நாம் தான் சாதாரண மலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மலத்தை வைத்து என்னென்ன செய்திருக்கிறார்கள் செய்கிறார்கள் என்று எண்ணும் போது மலைப்பு தான் மிஞ்சுகிறது. ஏன் புதின் அவர்களது மலம் கூட சூட்கேஸில் இத்தனை பாதுகாப்பாக மீண்டும் ரஷ்யா செல்கிறது என இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு பரூக் தெரிவித்துள்ளார்.

விசேஷ பரிசோதனை கூடம்

ரஷ்ய அதிபர் ஸ்டாலின் தொடங்கி வைத்த அந்த விசேஷ பரிசோதனை கூடத்தை அவருக்கு பிறகு வந்த கம்சோமோல்ஸ்கயா பிரவ்டா என்பவர் மூடிவிட்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக புடினின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் புடின் தன் கால்களை ஆட்டியது பலரது கவனத்தை பெற்றது. அது போல் இருக்கையில் அமர்ந்த போது அவர் நெளிந்தார். இதனால் புடினின் உடல் நிலைக்கு என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+