ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு.. சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: கொலை வழக்கில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக மக்களால் என்றுமே மறக்க முடியாத வழக்கு ஜீவஜோதி வழக்கு. அன்று சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்ற ஊழியர் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவிதான் ஜீவஜோதி. சாந்தகுமார், கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது.

ராஜகோபால்
சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது ராஜகோபால்தான் என்றும் சொல்லப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயுள் தண்டனை
இதையடுத்து, ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஐகோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பெயிலில் வெளியில் வந்த ராஜகோபால் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்தப் பெயிலைக் கேன்சல் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது தமிழக அரசு.

அப்பீல் மனு
இந்த மனுக்கள் மீதான விசாரணைதான் இன்று நடைபெற்றது. அப்போது, ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதுடன், சென்னை ஐகோர்ட்டின் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

வலுவான சாட்சியங்கள்
இந்த வழக்கில் சாட்சியங்கள் வலுவாக இருப்பதால் இந்த ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications