ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு.. சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: கொலை வழக்கில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக மக்களால் என்றுமே மறக்க முடியாத வழக்கு ஜீவஜோதி வழக்கு. அன்று சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்ற ஊழியர் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவிதான் ஜீவஜோதி. சாந்தகுமார், கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது.

ராஜகோபால்
சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது ராஜகோபால்தான் என்றும் சொல்லப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயுள் தண்டனை
இதையடுத்து, ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஐகோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பெயிலில் வெளியில் வந்த ராஜகோபால் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்தப் பெயிலைக் கேன்சல் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது தமிழக அரசு.

அப்பீல் மனு
இந்த மனுக்கள் மீதான விசாரணைதான் இன்று நடைபெற்றது. அப்போது, ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதுடன், சென்னை ஐகோர்ட்டின் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

வலுவான சாட்சியங்கள்
இந்த வழக்கில் சாட்சியங்கள் வலுவாக இருப்பதால் இந்த ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications