அதி தீவிர புயலான "பைபர்ஜாய்.." வானில் இருந்து பார்த்தால் இப்படி தான் இருக்குமா! அடேங்கப்பா.. செம!
டெல்லி: பைபர்ஜாய் புயல் இந்தியாவின் பல பகுதிகளை வைத்துச் செய்யும் நிலையில், இந்த புயல் வானத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலத்தில் வெயில் நம்மை வைத்துச் செய்துவிட்டது. மதிய நேரத்தில் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது.

இப்போது வெயில் காலம் முடிந்துள்ள நிலையில், நாட்டில் பல இடங்களில் பருவ மழை இப்போது ஆரம்பித்துள்ளது. நாட்டில் இப்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பைபர்ஜாய் புயல்: குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இப்போது கனமழை பெய்து வருகிறது. பைபர்ஜாய் புயல் காரணமாக இப்போது பல இடங்களில் மழை வைத்துச் செய்து வருகிறது. இந்த புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இந்தப் பைபர்ஜாய் புயல் இப்போது குஜராத் கடற்கரையிலிருந்து 200 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் மாலை 4-8 மணிக்குள் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மிகக் கடுமையான சூறாவளி புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.. புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக மணிக்கு 115-125 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: குறிப்பாக மதிய நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக சுமார் 120 கிராமங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், புயல் காரணமாக சில மீட்டர் வரை அலைகள் எழுகிறது என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குஜராத்தில் இந்தப் புயல் காரணமாக இப்போது பல மாவட்டங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பைபர்ஜாய் புயலை வானில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் ஒருவர், பைபர்ஜாய் புயல் குறித்த போட்டோ மற்றும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Watch as a tropical cyclone forms over the Arabian Sea from these views I captured.
— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) June 13, 2023
The ISS provides a unique perspective on several natural phenomena, which can assist experts on Earth in weather monitoring.🌩️🌀
Stay safe, everyone! pic.twitter.com/dgr3SnAG0F
விண்வெளி படங்கள்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி என்பவர் தான் இப்போது அரேபியக் கடலில் பைபர்ஜாய் புயலின் படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தைப் பகிர்ந்த அவர், "நான் முன்பு உறுதியளித்தபடி, அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயலின் சில படங்களை இப்போது பகிர்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த படங்கள் தான் இது" என்று பதிவிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மேலே மேகக் கூட்டங்கள் சூழ்ந்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பைபர்ஜாய் புயல் என்று இல்லை எந்தவொரு தீவிர புயலாக இருந்தாலும் வானில் இருந்து பார்க்க கிட்டத்தட்ட இதேபோலத் தான் இருக்கும். இன்று புயல் கரையைக் கடக்கும் நிலையில், மக்களைக் காக்கவும் சேதங்களைக் குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications