'ரியல் மங்காத்தா'.. அருணாச்சலில் ஆடாமல், ஓடாமல், உட்கார்ந்தே பாஜக ஜெயித்தது எப்படி?
டெல்லி: மங்காத்தா படத்தில் ஒரு பாடல் வரும், இது அம்பானி பரம்பரை என்று ஆரம்பிக்கும்.. ஆடாம ஜெயிச்சோமடா
நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா. ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம் என்று பாடல் வரும்.. அந்த பாடல் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவிற்கு அப்படியே பொறுந்தும். எப்படி என்பதை பார்ப்போம்
18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் அணாசலபிரதேசத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவாகின.

சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் இறங்கின.
இதில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதனால் எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட் பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்
மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்தமுறை 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்ற பாஜக, இந்த முறையும் அதேபோன்ற வெற்றியை பெறும் என தெரிகிறது. தற்போது வரை 33 இடங்களில் முன்னிலையிலும், 2 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 45 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது,
சரி, அருணாச்சலில் பாஜக இப்படி அதிரடியாக வெற்றி பெற என்ன காரணம்.. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் பீமா காண்டு தலைமையில் 43 எம்எல்ஏக்கள் அப்படியே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அருணாச்சல மக்கள் பிரதேச கட்சியில் (அப்போது பாஜக கூட்டணி கட்சி) இணைந்தனர்.
அதாவது ஒரு மாநிலத்தில் இருந்த முதல்வர் முதல் எல்லாருமே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். காங்கிரஸ் கட்சியில் தூபம் நகி என்ற ஒரு எம்எல்ஏ தவிர அனைவரும் கட்சி மாறினார்கள்.. அன்று அழிந்த காங்கிரஸ், அதற்கு பிறகு அதில் இருந்து எழுந்திருக்கவே இல்லை.. அதேநேரம் முதல்வர் பீமா காண்டு தலைமையில் 33 எம்எல்ஏக்கள் சரியாக, அதே 2016ம் ஆண்டு டிசம்பரில் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அருணாச்சல மக்கள் பிரதேச கட்சியும் பாஜகவால் அழிந்தது. அப்போது போல் பீமா காண்டு தான் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.
பீமா காண்டு எப்படி காங்கிரஸ் கட்சியை அப்படியே அழித்து பாஜகவில் இணைத்தார் என்றால் அதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. 2016ல் பீமா காண்டு மீது அமலாக்கத்துறை வழக்கு இருந்தது. இதனால் அவர் பெரும் சிக்கலில் இருந்தார். அதன்பின்னர் உடனடியாக அவர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தவர் பின்னர், பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு அவர் மீது வழக்கு குறித்து சரியான தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை. பீமா காண்டு தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்கவே பாஜகவில் இணைந்தார் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று வரை வைத்து வருகின்றன.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.. மங்காத்தா படத்தில் வரும் இது அம்பானி பரம்பரை என்று ஆரம்பிக்கும் பாடலின் படி, 9 கிரகமும் ஒன்றாக இருக்கு, ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா. ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம் என்று பாடல் வருமே அந்த வரிகளின் படி, அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவிற்கு அப்படியே பொருந்துகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications