பாதுகாப்பு வளையம் தாண்டி தாக்குதல் எப்படி சாத்தியமானது? நாடாளுமன்ற பாஸ் வாங்குவது எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஆட்சி பீடம் நாடாளுமன்றம். அதற்கு உள்ளே எத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கும். ஐடி கார்டு சோதனை, வெடிகுண்டு சோதனை என பல சோதனைகளையும் தாண்டி இரண்டு பேர் பார்வையாளர் மாடத்திலிருந்து மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்துள்ள இடத்தில் எப்படி குதித்தார்கள் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம்.

குதிப்பதை கூட புரிந்து கொள்ள முடியும், ஆனால் கையில் வண்ணமயமான புகைகளை கக்கக்கூடிய குண்டுகளை எப்படி வைத்திருந்தார்கள் என்பது மேலும் பல கேள்விக்கணைகளை எழுப்பும் விஷயமாகும்.

How security breach happened in Indian Parliament today?

முதலில் பார்வையாளர்கள் எப்படி நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம். நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ, பார்வையாளர்கள் மாடத்தில் அமர்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் தான் பாஸ் கொடுக்கிறார்கள். எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்கள் அலுவலகத்திற்கு சென்று பாஸ் வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால், நாடாளுமன்ற வளாகத்தில் அவர்களை சந்தித்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.

சில நேரங்களில், பத்திரிகையாளர்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து பாஸ் வாங்கி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுப்பதும் உண்டு. மக்களவை உறுப்பினர்களோ, பத்திரிக்கையாளர்களோ, பாஸ் பெறுபவர்களின் பின்புலங்களை முழுமையாக ஆராய்ச்சி செய்ய முடியாது. அப்படியான நேரத்தில் தான் தந்திரமாக பாஸ் பெற்றுக் கொள்ளும் நபர்கள் திடீரென சட்டசபை அல்லது நாடாளுமன்றத்திற்குள் கலாட்டாவில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. பார்வையாளர் மாடத்தில் அமர்ந்தபடி திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்புவதை பல்வேறு சட்டசபைகளில் நாம் பார்த்திருக்கிறோம்.

பார்வையாளர் மாடம் மக்கள் பிரதிநிதிகள் அமர்ந்து இருக்கக்கூடிய இருக்கைக்கும் மேலே இருப்பதால் அங்கிருந்து தாவிக் குதிப்பதும் எளிதான விஷயமாக இருக்கிறது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியபடி, விஷமிகள் வீசிய குண்டில் இருந்து வந்த புகை, தீமை விளைவிக்கக்கூடியது கிடையாது. எனவே நாடாளுமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள மெட்டல் டிடெக்டர் கருவிகளில் அதை கண்டுபிடிக்க இயலவில்லை என்று தெரிகிறது. வெடி மருந்துகளாக இருந்திருந்தால் பாதுகாப்பு கருவிகள் அதை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்திருக்கும். இருப்பினும் உருண்டை வடிவத்தில் ஒரு பொருளை உள்ளே எடுத்துச் செல்லும்போது அதன் மீது சந்தேகம் வந்து சோதித்து பார்த்திருக்க வேண்டியது பாதுகாவலர்கள் கடமையாகும். இந்த இடத்தில் பாதுகாப்பு குளறுபடி நடந்திருக்கிறது என்பதுதான் அடிப்படை விஷயமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+