ஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி? வெளியான கால அட்டவணை
டெல்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான கால நேரம் உள்ளிட்டவை அடங்கிய, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலால், கடந்த மார்ச் மாத 2வது வாரத்திற்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே நாடு முழுக்க, பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை கட்டாயப்படுத்தி ஆரம்பித்துள்ளன.
எல்கேஜி, யூகேஜி குழந்தைகள் முதல், ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறது. இவர்கள், சிறு குழந்தைகளாக இருப்பார்கள். அப்படியான பிள்ளைகளிடம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மொபைல் போனை கொடுத்து அவர்கள் அதை பார்க்கும்போது, உடல் மட்டுமின்றி, நிறைய மன உளைச்சல் சார்ந்த பிரச்சனைகளும் உருவாகுகிறது.

ஆன்லைன் வகுப்புகள்
இந்த நிலையில்தான், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அந்த வழிகாட்டும் நெறிமுறை இன்று மாலை வெளியிடப்பட்டது. நாடு முழுமைக்கும் இது பொருந்தும். மாற்றங்களை செய்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், பெரும்பாலும் அதை மாநில அரசுகள் செய்யாது.

எல்கேஜி, யூகேஜி எப்படி?
எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்புகள் வேண்டாம். குறிப்பிட்ட நாளில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட இந்த வகுப்புகளை பயன்படுத்தலாம்.

1 முதல் 8ம் வகுப்பு
ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 30 முதல், 45 நிமிடங்கள் வீதம் இரண்டு கட்டமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த வகுப்புகள், ஒரே நாளைக்கு இரண்டு செஷன்களை வகுப்பு நேரம், தாண்டக் கூடாது. எந்தெந்த நாட்களில் வகுப்புகள் நடத்துவது என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.

12ம் வகுப்பு வரை
ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் என்றால் அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகளில் பங்கேற்கலாம். ncert கல்வி காலண்டரில் குறிப்பிட்டுள்ள தேதிகள்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாம்.

9 முதல் 12ம் வகுப்புகள்
9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் ஒவ்வொரு வகுப்புகளை நடத்தலாம். வகுப்புகள் நடத்தும் நாட்களை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில், செல்போன் முன்பாக குழந்தைகள் செலவிடும் நேரம் கட்டுப்படுத்தப்படும். இப்போது சில பள்ளிகள் தினமும் 8 மணி நேரம் கூட ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications