Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைநழுவிய முதல்வர் பதவி.. ‛காந்தி குடும்ப முடிவை தலை வணங்கி ஏற்கிறேன்’.. டிகே சிவக்குமார் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகா முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவி கைநழுவியது பற்றி டிகே சிவக்குமார் உருக்கமான சில விஷயங்களை கூறியுள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கிடையே தான் முதல்வர் பதவியை பெற மாஜி முதல்வர் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.

I bow down and accept the decision of the Gandhi family, DK Shivakumar says after the Karnataka CM Post missing

இதில் இறுதியாக சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். அதேவேளையில் டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அமைச்சரவையில் எனக்கு முதல்வர் பதவி மட்டுமே வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த பொறுப்பும் வேண்டாம். எம்எல்ஏவாகவும், காங்கிரஸ் தலைவராகவும் செயல்படுவேன் என டிகே சிவக்குமார் கறாராக மேலிட தலைவர்களிடம் கூறினார். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி துணை முதல்வர் பதவியை மேலிட தலைவர்கள் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவி கைநழுவிய நிலையில் டெல்லியில் டிகே சிவக்குமார் பேட்டி, ‛‛கர்நாடகா மக்களுக்கு நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வேறு நெருங்கிவிட்டது. இதனால் தற்போதைய சூழலில் வேறு எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் உத்தரவுக்கு நான் தலைவணங்க வேண்டும். கட்சியில் பெரும்பான்மையினரின் முடிவுப்படி செயல்பட வேண்டியது அவசியமானதாக உள்ளது.

I bow down and accept the decision of the Gandhi family, DK Shivakumar says after the Karnataka CM Post missing

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வியூகத்தை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பல சமயங்களில் நமது விருப்பத்தை விட மேலிட தலைவர்கள் சொல்வதை தான் நாம் கேட்க வேண்டும். இதன் பின்னணியில் நமக்கு மிகப்பெரிய பொறுப்பும் உள்ளது. இதனால் கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி அரசு செயல்படும்'' என்றார்.

இதன்மூலம் நீண்ட இழுபறிக்கு பிறகு டிகே சிவக்குமார் காங்கிரஸ் மேலிட தலைவர்களின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு துணை முதல்வராக தொடர உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. நாளை மறுநாள் பெங்களூரில் நடக்கும் விழாவில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+