என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. எடப்பாடியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை.. முக ஸ்டாலின் பதிலடி!
டெல்லி: தன்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை, எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் எப்போது டெல்லி வந்தாலும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்றதில்லை என்று கூறிய அவர், அமலாக்கத்துறை குறித்த உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து நியாயமானது என்றும் வரவேற்றுள்ளார்.
யார் அந்த தம்பி?
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கு பின், கடந்த வாரம் டாஸ்மாக் ஊழியர்கள் வீடுகள், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணை சூடுபிடித்த நிலையில், அதிமுக தரப்பில் யார் அந்த தம்பி என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வெள்ளைக் கொடி
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள அறிவிப்பு வெளியாகியது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டதோ என்று கிண்டல் செய்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியது யார் என்று பதிலடி கொடுத்தார்.
டெல்லியில் முக ஸ்டாலின்
இந்த நிலையில் டெல்லி இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் 4 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக கல்வி நிதி மற்றும் நிதிப் பகிர்வு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
கோரிக்கைகள்
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தினேன். அதேபோல் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.
எடப்பாடிக்கு பதிலடி
அதேபோல் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கான நிதி, இலங்கை அரசு சிறை பிடித்துள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தினேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை.. அவரிடம் உள்ள காவிக்கொடியும் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து அமலாக்கத்துறை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து தொடர்பான கேள்விக்கு, நியாயமான கருத்து என்று பதில் அளித்தார். காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மரியாதைக்குரியது. எப்போது டெல்லி வந்தாலும், அவர்களை சந்திக்காமல் சென்றதில்லை. அதே சமயம் அரசியலும் பேசப்பட்டது. இல்லையென்று சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications