ரூ.100 கோடி வரி ஏய்ப்பு?.. வருமானவரித்துறை புகாரால் ராகுல், சோனியாவுக்கு சிக்கல்
டெல்லி:சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முறையே ரூ.155 கோடி மற்றும் ரூ.154 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை பரபரப்பு குற்றச் சாட்டு தெரிவித்துள்ளது.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். அதில் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் வருமானத்தை மறு ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2011, 2012-ம் ஆண்டுகளில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கண்டறியப்பட்டிப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
அதன்படி ரூ.300 கோடி வரையிலான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மறு ஆய்வு செய்யும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சோனியாவும், ராகுல் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் கூறியதாவது:யங் இண்டியன் நிறுவனத்தில் ஒரே சொத்து அதன்மீதுள்ள 90 கோடி ரூபாய் கடன் மட்டுமே.
ஆனால் அதனை வருமான வரித்துறை 407 கோடி ரூபாய் என தவறாக கணக்கு காட்டியுள்ளது. மேலும் ராகுல், சோனியா ஆகியோருக்கு தங்கள் சொத்துக்களை வருமான வரித்துறையினர் மறு ஆய்வு செய்யும் தகவல் சரியான காலத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து, வருமான வரித்துறை மற்றும் சோனியா, ராகுல் தரப்பு ஆகிய இரு தரப்பினரையும் இன்னும் ஒருவார காலத்துக்குள் தங்கள் வாக்குமூலங்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications