நேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்!
நேற்று இரவு 8.45 மணிக்கு கூட சுஷ்மா சுவராஜ் என்னிடம் நன்றாக போனில் பேசினார், அவரின் மரணத்தை நம்பவே முடியவில்லை என்று சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: நேற்று இரவு 8.45 மணிக்கு கூட சுஷ்மா சுவராஜ் என்னிடம் நன்றாக போனில் பேசினார், அவரின் மரணத்தை நம்பவே முடியவில்லை என்று சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார், இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவருக்காக சர்வதேச அரங்கில் அதிகம் குரல் கொடுத்தவர் என்றால், அது முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த சுஷ்மா சுவராஜ்தான்.

ஆஜர்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச அரங்கத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வ், சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர். இந்த நிலையில் சுஷ்மா சுவராஜின் மரணத்துக்கு தற்போது ஹரிஷ் சால்வ் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

கடைசி வரை
அதில், நான் நேற்று இரவு 8.45க்குதான் போனில் பேசினேன். என்னிடம் மிகவும் நன்றாக எப்போதும் போல பேசினார். அவரின் குரலில் எந்த மாறுபாடும் இல்லை. அவர் என்னிடம் ஒரு ரூபாய் கடன் வைத்து இருப்பதாக கூறினார்.

எப்படி இருந்தார்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வெற்றிபெற்றால் ஒரு ரூபாய் சம்பளம் கொடுப்பதாக நாங்கள் ஒப்பந்தம் போட்டோம். அதை அடுத்த முறை சந்திக்கும் போது அவர் கொடுப்பதாக கூறினார். ஆனால் தற்போது அது நடக்காமல் போய்விட்டது.

உதவி
வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கு உதவி செய்வதற்காக அவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லக்கூடிய நிலையில் இருந்தார். இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய இழப்பு. தனிப்பட்ட வகையில் மட்டுமல்ல, நாட்டுக்கே அவரின் இழப்பு மிகப்பெரிய இழப்பு.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications