Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த ஆகஸ்ட் 15-ல் இதே டெல்லி செங்கோட்டையில்தான்... 'தலப்பா கட்டி' கெத்துடன் முழங்கிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியன்றும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாடு என்ன சாதித்தது? என்கிற பட்டியலை பிரகடனப்படுத்துவோம் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் இன்று 10-வது முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார்.

I will present before you achievements on Next year Aug. 15: PM Modi

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி அடுத்த லோக்சபா தேர்தலில் வென்று மீண்டும் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடி ஏற்றுவேன் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். வாரிசு அரசியல் என்பது இந்த தேசத்தையே நாசமாக்கிவிட்டது. நாட்டின் பண்பாட்டுக்கு எதிரானது ஒருதரப்பை சமாதானப்படுத்தும் போக்கு. ஆகையால் ஊழல், வாரிசு அரசியல், குறிப்பிட்ட தரப்பை மட்டும் சமாதனப்படுத்துதல் ஆகிய 3 தீமைகளுக்கு எதிராக முழுமையான நாம் போராட வேண்டும்.

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறோம். மக்கள் நலத் திட்டங்க்களில் 10 கோடி போலி பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் யாரும் எதிர்பாராத வளர்ச்சியை நாடு அடையும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைகள் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியன்று இதே செங்கோட்டையில் இர்ருந்து நாடு சாதித்த வளர்ச்சிகளை உங்கள் முன் சமர்ப்பிப்போம். 2047-ல் முழுமையான வளர்ச்சி என்பது ஒருவரின் கனவு அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவு,.

2014-ல் ஆட்சிக்கு வந்த போது இந்தியா உலகப் பொருளாதாரத்தில் 10-வது இட்டத்தில் இருந்தது. தற்போது 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

வடகிழக்கில், குறிப்பாக கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் அமைதி த்இரும்பி வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் மணிப்பூருடன் இணைந்து நிற்கிறது. இவ்வாறு பிரதமர் மோட்டி உரையாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+