உ.பி. ஆக்ரா அருகே மிக்-29 ரக போர் விமானம் தீ பிடித்து விழுந்து நொறுங்கியது-விமானிகள் உயிர் தப்பினர்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் வயலில் விழுந்து தீ பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானிகளும் பாராசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினர். இரு விமானிகளும் விமான விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மீட்கப்பட்டனர். இந்த விமான விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் இருந்து பயிற்சிக்காக மிக் 29 ரக போர் விமானம், விமானிகள் இருவருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது உ.பி. ஆக்ரா அருகே வயல்வெளி மீது பறந்த நிலையில் நடுவானில் திடீரென போர் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் இருவரும் நடுவானில் இருந்து பாராசூட் உதவியுடன் விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். நடுவானில் தீப்பிடிந்த விமானம் வயல்வெளியில் விழுந்து கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விமானம் விழுந்த இடத்தில் இருந்து 2கிமீ தொலைவில் தரை இறங்கிய விமானிகள் 2 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications