தொலைபேசி ஒட்டுக் கேட்பு: NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ரவி நரேன் அமலாக்கத்துறையால் அதிரடி கைது
டெல்லி: தேசிய பங்கு சந்தை (NSE) அதிகாரிகளின் தொலைபேசிகளை சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்டதாக அதன் முன்னாள் தலைவர் ரவி நரேன், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பங்கு சந்தையில் (NSE) கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நிர்வாக இயக்குநராக இருந்தார் சித்ரா ராமகிருஷ்ணா என்ற சித்ரா ராமகிருஷ்ணன். சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அத்துடன் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலை சாமியார் என்ற மர்ம நபரிடம் சட்டவிரோதமாக சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார் என்பதும் புகார்.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் இமயமலை சாமியார் என்ற மர்ம நபர், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அனுப்பிய அந்தரங்க களியாட்ட மடல்களும் அம்பலமாகியது. இதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா, அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் ஜாமீன் கிடைக்காததால் சிறையில் உள்ளனர். மேலும் பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ5 கோடி அபராதம் விதித்தது செபி. அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் ரூ5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே மற்றும் தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் ரவிநரேன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதிய வழக்குப் பதிவு செய்தனர். அதாவது தேசிய பங்கு சந்தை அதிகாரிகள், பணியாளர்களின் தொலைபேசிகளை மூவரும் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டனர் என்பது சிபிஐ வழக்கு.
இந்த வழக்கில் அண்மையில் சஞ்சய் பாண்டேவுக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் ரவி நரேனிடமும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ரவி நரேன், ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே ரவி நரேன், அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications