வருமான வரி தாக்கல்.. தாமதித்தால் இவ்வளவு சிக்கல்களா? சீக்கிரம் "பைல்" செய்தால் சூப்பர் பலன்கள்!
அக்.31 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட தேதிகளுக்கு முன்னர் வரியை செலுத்துவதன் மூலம் ரூ.10,000 அபராதம் மற்றும் இதர தேவையற்ற சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.
ஒருவேளை சரியான தேதிக்கு வரி செலுத்தாவிடில் வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 234A இன் கீழ் செலுத்த வேண்டிய வரிக்கு வட்டியும் போடப்படலாம். மட்டுமல்லாது வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டியும் இருக்கும். இதனால் சில சட்ட சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நோட்டீசுக்கு உரிய விளக்கமளிக்கவில்லையெனில் வரித்துறையினர் வழக்கும் தொடுக்க நேரிடும்.

இது ஒருபுறம் இருந்தாலும் நீங்கள் வரியை முறையாக செலுத்தி வந்தால் உங்களுக்கான கடன் வழங்கப்படுவது மேலும் எளிதாக்கப்படும். எந்த ஒரு கடனை வங்கி வழங்குவதற்கும் வருமான வரி சான்றிதழ்களை கோரும். ஒருவேளை வரி நிலுவை இருப்பின் உங்களுக்கு வழங்கப்பட இருந்த கடன் மேலும் தாமதமாகலாம்.
கடன்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகள் செல்ல விசா பெறுவதற்கும் வருமான வரி ரிட்டன் அவசியமாகும். ஒரு வேளை இதில் ஏதேனும் நிலுவை இருப்பின் விசா கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வருமான வரியை தாக்கல் செய்துவிடுங்கள்.












Click it and Unblock the Notifications