தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்.. குதிரை பேரம்.. உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு
சென்னை: தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஊழல் நடைபெற்றதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 108 இடங்களில் மட்டுமே தவெக வென்றது. காங்கிரஸ் கட்சி (5 எம்.எல்.ஏக்கள்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 எம்.எல்.ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 எம்.எல்.ஏக்கள், விசிக 2 எம்.எல்.ஏக்கள் என கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கடந்த 13 ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏக்களும் தவெகவிற்கு ஆதரவு அளித்தனர். இதனால், 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை காட்டியது.
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு அளித்த விவகாரத்திலும் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி ஆதரவு அளித்த விவகாரத்திலும் குதிரை பேரம் நடத்தப்பட்டு இருப்பதாகவும் பதவி ஆசை காட்டி தங்கள் அணிக்கு விஜய் இழுத்து இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் போது நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணை முடியும் வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications