Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடபுடல்! ஜனாதிபதி மாளிகையில் கூடிய மோடி உள்ளிட்ட தலைவர்கள்! திரெளபதி முர்மு அசத்தலான விருந்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு ராஷ்ட்ரிபதி பவனில் இன்று விருந்து வழங்கினார். இதில் துணை ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வெளிநாடுகளின் தூதர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் நாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்.

Independece day: PM Modi and RN Ravi participates on Droupadi Murmu hosted the at Home reception

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி, ஆளுநர்கள் சார்பில் தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கமாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை மழை எச்சரிக்கையால் ஆளுநர் ஆர்என் ரவியின் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்து மாற்றுத்தேதியில் வைக்கப்பட உள்ளது. மாறாக பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தேநீர் விருந்து நடந்தது. இன்று மாலையில் டெல்லி ஜனாதிபதி திரெளபதி முர்மு, அரசியல் தலைவர்கள் உள்பட பல பிரபலங்களுக்கு ராஷ்ட்ரிய பவனில் தேநீர் விருந்து வழங்கினார்.

இதில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் பங்கேற்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பிற நீதிபதிகள், வெளிநாடுகளின் தூதர்கள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த வந்தவர்களை ஜனாதிபதி திரெளபதி முர்மு கைக்கூப்பி வரவேற்பு விருந்து வழங்கினார். முன்னதாக நேற்று மாலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது, ‛‛மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாம் தனி நபர்கள் அல்ல. மிகப்பெரிய சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது. ஜாதி, மதம், மொழி மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. அதுதான் இந்தியன்.

காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்'' எனபன உள்பட பல்வேறு விஷயங்களை நாட்டு மக்களிடம் பேசினார். அதோடு இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+