பாகிஸ்தானை சரமாரியாக தாக்கிய ஈரான்.. உள்ளே புகுந்த இந்தியா.. பரபரப்பு நிலைப்பாடு.. பெரிய ட்விஸ்ட்
டெல்லி: பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இப்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. "இரண்டு தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான், இந்தச் சம்பவம் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்றும், "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் எச்சரித்து உள்ளது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது, கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க போகிறது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் - ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. முக்கியமாக ஈரான் ஆதரவு ஹவுதி படைகள் தீவிரமாக அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன.
இந்தியா விளக்கம்: பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது. அதில்., இந்தியா தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது. அதை ஆதரிக்காது. மேலும் தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை, தாக்குதல்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
இது இரண்டு நாட்டு பிரச்சனை என்றாலும் ஈரான் தற்காப்பிற்காக இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை நாம் கொண்டுள்ளோம். அந்த வகையில் இந்த தாக்குதலை ஈரான் முழுக்க முழுக்க தற்காப்பிற்கு மேற்கொண்டு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இதில் ஈரானுக்கு இந்த மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
சர்வதேச போர் பதற்றம்: தற்போது சர்வதேச அளவில் உலகப்போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஏமனில் போராடி வரும் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏமன் விடுதலை தொடங்கி இஸ்ரேல் போருக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் பிடன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் செங்கக்கடலில் அமெரிக்கா - ஹவுதிகள் இடையே மோதல் நடக்கும் நிலையில் பிடன் முடிவு செய்துள்ளார்.
நேற்று இரவில் இருந்தே ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நாட்டின் ஒரு பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.
நேற்று ஹவுதி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க செங்கடலில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications