கடந்த 8 மாதத்தில் இல்லாத அளவு! இந்தியாவை மிரட்டும் கொரோனா.. ஒருநாள் பாதிப்பு கிடுகிடு உயர்வு! பலி 7

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 227 நாட்களுக்கு பின்னர் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு நாட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா என்றும் கொடிய வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் கட்டுப்படாத கொரோனா கடைசியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகே ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.

India Covid 19 Case Raises 841 in last 24 hours 7 dies

அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. பின்னர் நாடு முழுவதுமே கொரோனா பரவல் சற்று அதிகமாகி வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இதுவரை இல்லாத அளவாக அதாவது 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2082 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4309 ஆக உள்ளது.

கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், கர்நாடக மாநிலத்தில் நிலவும் பனியின் காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாவும், கர்நாடகாவில் வரும் 2-ந் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணியை அம்மாநில அரசு தொடங்க உள்ளது. 3-வது தடுப்பூசி போட விரும்புவோர் ஆதார் கார்டு எண்ணை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+