30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு.. ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை.. பூரிக்கும் பிரதமர் மோடி
டெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி துறையில் இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைந்து சாதனை செய்துள்ளது. இதையொட்டில் விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், ஏற்றுமதியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனை ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முக்கிய மைல்கல் என அவர் பெருமையாக கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், கொரோனாவால் முடங்கிய சிறு, குறு, நிறுவனங்கள், விவசாயிகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக ஆத்மநிர்பார் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு கடனுதவி உள்பட ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி அதிகரிப்பு
மேலும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கான ஏற்றுமதி சதவீதம் தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது. இது இந்திய நிறுவனங்களுக்கு நம்பிக்கையை அளித்தன.

டிசம்பரில் சாதனை
வர்த்தக அமைச்சகத்தின் நிலவரப்பட்டி கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா 37.29 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை செய்தது. இது இதுவரை இல்லாத சாதனையாகும். மேலும், முந்தைய ஆண்டு டிசம்பரை ஒப்பிடும்போது இது 37 சதவீதம் அதிகமாகும். இது இந்திய வணிக பொருள் ஏற்றுமதி துறையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்தது.

9 மாதத்தில் எவ்வளவு
இதுகுறித்து கடந்த ஜனவரியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார். அவர் கூறுகையில், ‛‛ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்த ஆண்டு இந்தியா இலக்கை அடையும் வகையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது அழைப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் 2021-22 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 330 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இலக்கை அடையும் பாதையில் உள்ளோம்'' என கூறியிருந்தார்.

பூர்த்தியான இலக்கு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி இலக்கு 400 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில் தான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில் ஏற்றுமதி இலக்கை இந்தியா தற்போது அடைந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி வாழ்த்து
‛‛இந்தியா 400 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்வதை லட்சியமாக கொண்டு இலக்கு நிர்ணயித்தது. தற்போது இந்த இலக்கு முதன் முறையாக எட்டப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்காக விவசாயிகள், நெசவாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை நடத்துவோர், ஏற்றுமதியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முக்கிய மைல்கல்'' என குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications