அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது
Recommended Video
டெல்லி: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை, இந்தியா நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கடந்த நவம்பர் மாதமே உலக நாடுகளுக்கு தடை விதித்து விட்டது அமெரிக்கா.
ஆனால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வசதியாக இந்தியா, சீனா, உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருந்தது. 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இனிமேலும் விதிவிலக்கு தர முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது.

மே 1-ம் தேதிக்கு பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது. இது பற்றி பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மைக் பாம்பியோ, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இனி எந்த நாட்டிற்கும் விதிவிலக்கு அளிக்க இயலாது.
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெயை எந்த ஒரு நாடும் ஏற்க கூடாது என்ற முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்களது கொள்கையை மற்ற நாடுகள் எவ்வாறு கடைபிடிக்கின்றன என்பதை மிக உன்னிப்பாக கண்காணிப்போம். எந்த ஒரு நாடோ அல்லது நிறுவனமோ ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முனைந்தால் அது தவறு என அர்த்தம் என்றார்.
வெனிசுலா மற்றும் ஈரான் என இரண்டு நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இரண்டு நாடுகளுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வலம் அதிகமுள்ள நாடுகள். அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியாவும் பணிய உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து இறக்குமதியை நிறுத்தினால் உருவாகும் பற்றாக்குறையை ஈடு செய்ய சவுதி, குவைத், ஐக்கிய அரபு உள்ளிட்ட மற்ற நாடுகளிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க பேச்சு நடத்தி வருவதாக கூறியுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், தேர்தலை கருத்தில் கொண்டு விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு, வாக்குப்பதிவு முடிந்ததும் ஒரே நாளில் ரூ.10 வரை பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
-
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன?












Click it and Unblock the Notifications