மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி.. பயோலாஜிக்கல் இ தடுப்பூசியின் 3வது கட்ட சோதனைக்கு இந்தியா ஒப்புதல்
டெல்லி: இரு சோதனைகளை இந்தியாவில் வெற்றிகரமாக முடித்துள்ள பயோலாஜிக்கல் இ என்ற தடுப்பூசியின் 3ஆவது சோதனை நடத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிக்க இரு தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டன. அவை ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவை ஆகும்.

இந்த நிலையில் உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல் இ என்ற நிறுவனத்தின் தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இரு முறை சோதனை ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி கண்டது.
தற்போது 3ஆவது முறை சோதனை செய்ய மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 15 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
18 வயது முதல் 80 வயதுடைய 1,268 பேருக்கு இந்த தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பூசியில் உள்ள ஆன்டிஜென் கொரோனா தடுப்பூசிக்கான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மையம் உருவாக்கியது.
இந்த நிறுவனத்தின் தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் முதல் மற்றும் இரண்டாவது மருத்துவ சோதனையில் வெற்றிக்கண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications