புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி.. 40 வீரர்களுக்கு 200 தீவிரவாதிகள்.. வெகுண்டெழுந்த இந்தியா!
Recommended Video

டெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை இழந்த நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமான படை தாக்குதல் நடத்தி தக்க பதிலடியை கொடுத்தது.
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 75-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி 350 கிலோ வெடிப்பொருட்களுடன் வீரர்களின் வாகனத்தின் மீது மோதினான்.
அப்போது வெடித்து சிதறியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. 40 வீரர்களை கரித் துண்டுகளாக பெற்றது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒத்திகை
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் முழு சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்தியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போர் நடத்தும்விதமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் எல்லை கோட்டு பகுதியில் ஒத்திகை நடத்தி வந்தன.

தீவிரவாத முகாம்கள்
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 12 எண்ணிக்கையிலான மிராஜ் ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் 1000 கிலோ வெடி பொருட்களை தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது வீசியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

வெடிப்பொருள்
இந்த சம்பவத்துக்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிகின்றன. மேலும் 40 வீரர்களுக்கு பதிலாக 200- 300 தீவிரவாதிகளை இந்தியா அழித்தது. அதோடு 350 கிலோ வெடிப்பொருளுக்கு பதிலாக 1000 கிலோ வெடிப்பொருளை இந்தியா பயன்படுத்தியது.

பேய்
நட்புறவு காட்டும் இடத்தில் இந்தியா தாய்க்கு இணையாகவும் எதிரியாக பாவிக்கும் இடத்தில் பேய்க்கு இணையாகவும் இந்தியா மாறும் என்பதற்கு இது இரண்டாவது உதாரணம் ஆகும். இந்த தாக்குதல் மூலம் 40 வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications