Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. இனி "இந்த" டைப் நகைகளை வாங்க முடியாது? ஷாக் கொடுத்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் எப்போதும் தங்க நகைகள் தான் அதிகம் விற்பனையாகும். தங்கத்தைத் தாண்டி விலையுயர்ந்த உலோகங்களாக இருக்கும் வைரம் மற்றும் பிளாட்டினம் நகை விற்பனை இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு திடீரென சில வகை நகைகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் எப்போதும் தங்கத்திற்குத் தனியாக ஒரு மவுசு இருக்கும். இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் ஒவ்வொரு மாதமும் பல டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறோம். விலை ஏறினாலும் கூட தங்க விற்பனை பெரியளவில் குறைவது போலத் தெரியவில்லை.

India Imposes Import Curbs on Platinum-Alloy Jewellery DGFT Requires Licence Until April 2026

பிளாட்டினம் கட்டுப்பாடு

தங்கத்தைப் போலவே, அதை விட விலையுயர்ந்த உலோகங்களான வைரம், பிளாட்டினம் நகைகளும் இப்போது இந்தியாவில் கூட விற்கப்படுகிறது. தங்கம் அளவுக்கு அவற்றுக்கு மவுசு இல்லை என்றாலும் கூட ஓரளவுக்கு விற்பனை நடக்கவே செய்கிறது. குறிப்பாக நகர்ப் புறங்களில் இந்த வகை நகைகள் விற்பனை கணிசமாகவே இருக்கிறது. இதற்கிடையே மத்திய அரசு சில வகை பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பிட்ட வகை பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

என்ன மாற்றம்!

அதில் பிளாட்டினம் நகைகளுக்கான இறக்குமதி கொள்கை உடனடியாக மாற்றப்படுவதாகவும் பிளாட்டினம் இறக்குமதி Free என்பதில் இருந்து Restricted என்பதற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி பிளாட்டினம் நகைகளை இறக்குமதி செய்ய DGFT-யிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற நிறுவனங்களால் மட்டுமே இந்த 5.5 மாத காலத்திற்குப் பிளாட்டினம் நகைகளை இறக்குமதி செய்ய முடியும்.

காரணம் என்ன?

இந்தியாவில் இத்தனை காலம் பிளாட்டினம் நகைகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. இதை சில வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அதாவது 90% தங்கம் அல்லது வெள்ளி மூலம் செய்யப்படும் நகைகளில் சிறு அளவு பிளாட்டினம் இருந்தாலும் கூட அதைப் பிளாட்டினம் நகை எனச் சொல்லி இறக்குமதி செய்துள்ளனர். சுமார் 90% தங்கம் இருந்தும், பிளாட்டினம் நகை என்ற பெயரில் அரசு சலுகை பெறுவது கண்டறியப்பட்டது.

இந்த சிக்கலைச் சரி செய்ய வேண்டும் என இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்றே மத்திய அரசு இப்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேநேரம் மத்திய அரசு கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்துள்ளது. உரிமம் பெற்ற இந்த நகைகளை இறக்குமதி செய்யலாம். இந்த உத்தரவால் பிளாட்டினம் நகைகளே கிடைக்காது என்பது போல தகவல்கள் பரவுகிறது. அதில் உண்மை இல்லை.

வெள்ளி நகைகள்

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இதேபோல வெள்ளி மீதும் மத்திய அரசு தடை விதித்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம், தாய்லாந்தில் இருந்து "கற்கள் பதிக்கப்படாத நகைகள்" என்ற பெயரில் வெள்ளி இறக்குமதி அதிகரித்த நிலையில், அதைத் தடுக்க சில வகை வெள்ளி நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+