கொரோனாவுக்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 50 மருத்துவர்கள் மரணம்- இந்திய மருத்துவ சங்கம்
டெல்லி: கொரோனா 2-வது அலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் இடைவிடாமல் பணியாற்றுகின்றனர். முதலாவது கொரோனா பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம்
தற்போதைய கொரோனா 2-வது அலையில் 244 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் சுமார் 1,000 மருத்துவர்கள் இதுவரை மரணித்துள்ளனர்.

50 மருத்துவர்கள் மரணம்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் 50 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா 2-வது அலையில் இதுவரை பீகார் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 69 மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

பீகாரில் அதிகம்
கொரோனா 2-வது அலையில் உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும் டெல்லியில் 27 மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளனர். டெல்லியை சேர்ந்த அனாஸ் முஜாஹித் (வயது 26) என்ற ஜூனியர் மருத்துவர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தார்.

மருத்துவர் சங்கம் அதிர்ச்சி
இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களில் 3% பேர் மட்டுமே 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள். மருத்துவர்களின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. இது எதிர்பாராதது; துரதிருஷ்டவசமானது என்றனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications