கொரோனா கோரத் தாண்டவம்.. இந்தியர்கள் பீதியடைய வேண்டாம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நம்பிக்கை
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனோ பாதிப்பு குறித்த நிலைமை, பிரதமர் அலுவலகத்தால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வழிகாட்டுதல்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் வெப்பத் திரையிடல் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே காய்ச்சலுடன் ஏர்போர்ட் வரும் பயணிகள் கண்டறியப்படுகிறார்கள்.

வெளிவிவகார அமைச்சக உதவியுடன், சில மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக சீனாவுக்கு அனுப்புகிறோம்.
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகள் குறித்து பேசிய ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் உள்ள மூன்று நோயாளிகளையும் மிக நுணுக்கமாக கண்காணித்து வருகிறோம். அவர்களின் தொடர்பு வரலாற்றை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எல்லோரும் இந்த விஷயத்தில் பங்களிப்பு செய்தமைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்கிறோம். எனவே, மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றார்.
Union Minister Dr Harsh Vardhan on #Coronavirusus: We are monitoring the 3 cases in India very minutely. We have traced their contact history. We are really grateful that everybody is contributing. We are doing everything, so do not panic. pic.twitter.com/o0sGGC0QSF
— ANI (@ANI) February 13, 2020
இன்றுவரை, 2,51,447 விமான நிலைய பயணிகள் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளனர். 12 பெரிய மற்றும் 65 சிறு துறைமுகங்களிலும் ஸ்கிரீனிங் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications