இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோய் தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்று மத்திய அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா தொற்று நோயைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமலாக்கப்பட்டிருக்கிறது. இன்று 6-வது நாளாக லாக்டவுன் நீடித்து வருகிறது.

இருப்பினும் பல இடங்களில் லாக்டவுனை முழுமையாக ஏற்று பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கவில்லை. பல்வேறு காரணிகளை முன்வைத்து வீதிகளில் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.
அதேநேரத்தில் கொரோனா தொற்று நோயின் தாக்கமும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் 29 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தாக்கம், சமூகப் பரவல் எனும் நிலையை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிற நிலையில்தான் இருக்கிறது.

இது இன்னமும் சமூகப் பரவல் என்கிற நிலையை எட்டவில்லை. அப்படியான ஒரு நிலை உருவானால் அரசு அதை வெளிப்படையாகவும் அறிவிக்கும். ஆகையால் சமூகப் பரவல் ஏற்படாமல் இருக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி இந்தியாவில் 3-வது கட்டமாக சமூகப் பரவல் நிலை உருவாகிவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்போதும் இதை மத்திய அரசு மறுத்திருந்தது. தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மீண்டும் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறது.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications