பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுத்தேர்தலா? இந்தியா கடும் எதிர்ப்பு- உடனே வெளியேற எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளாக கில்ஜிட், பால்டிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்த மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு திருத்தப்பட்ட புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டது. அதில் லடாக் யூனியன் பிரதேசத்தில் லே, கார்கில் மாவட்டங்கள் இடம்பெறும். இதில் கார்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் எனவும் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளை மத்திய அரசு எந்த நேரத்திலும் கைப்பற்றும் என்கிற பேச்சும் இருந்தது. ஆனால் அப்படியான எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய அரசும் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் கில்ஜிட் - பால்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தல்களை நடத்தலாம் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்த தீர்ப்புக்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கில்ஜிட், பால்டிஸ்தான் உள்ளிட்ட அனைத்து காஷ்மீரின் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பகுதியில் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. ஆகையால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications