மீண்டும் எல்லை தாண்டி வந்த பாக். ட்ரோன்கள்! இடைமறித்து மொத்தத்தையும் அழிந்தது இந்தியா
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இது மூன்றாவது முறையான தாக்குதல் என்பதால் இந்திய விமானப்படை எந்நேரம் வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் உரி, குப்வாரா மற்றும் பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. அதேபோல பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை இடைமறித்து தாக்கி அழித்திருக்கின்றன. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்திருந்த வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரா, பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவத் தளம் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி என இரண்டையும் தாக்கி வருவதாக கூறியிருந்தார்.
இன்று ட்ரோன் தாக்குதலை தொங்கியதன் மூலம், பாகிஸ்தான் இந்த கூற்றை மேலும் உண்மை என நிரூபித்திருக்கிறது. ட்ரோன் தாக்குதல் காரணமாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. முன்னதாக இன்று மதியம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, இரவு பிரதமர் நரேந்திர மோடியும் முப்படைகளின் தளபதிகளை சந்திருந்தார்.
நேற்று பாகிஸ்தான் நடத்தியிருந்த தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. குறிப்பாக எஸ் 400 எனும் வான் பாதுகாப்பு அம்சம் பாகிஸ்தானின் வான் வழி அத்து மீறலை முறியடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications