இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 20,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 3641 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,000-த்தை தாண்டியது. ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1,000; 2,000 என உயர்ந்து கொண்டிருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு. பின்னர் கிடுகிடுவென அதிகரித்து 3,000-த்தை கடந்தது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டியதாக தொடர்ந்து வருகிறது. நேற்று காலை 24 மணிநேரத்துடனான ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,824 ஆக பதிவானது. அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று 3,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,26,246 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 18,389 ஆக இருந்தது. இது தற்போது 20,000-த்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறக் கூடியவர்கள் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1800 பேர் குணமடைந்தனர். கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொடர்பான மத்திய அரசு அறிக்கை:
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 686 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 20,219 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.05 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,800 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,75,135 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 3,641 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தினசரி பாதிப்பு விகிதம் 6.12% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.45% .இதுவரை மொத்தம் 92.18 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 59,512 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications