இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 20,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 3641 பேருக்கு தொற்று!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,000-த்தை தாண்டியது. ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1,000; 2,000 என உயர்ந்து கொண்டிருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு. பின்னர் கிடுகிடுவென அதிகரித்து 3,000-த்தை கடந்தது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,000-த்தை தாண்டியதாக தொடர்ந்து வருகிறது. நேற்று காலை 24 மணிநேரத்துடனான ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,824 ஆக பதிவானது. அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று 3,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,26,246 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 18,389 ஆக இருந்தது. இது தற்போது 20,000-த்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறக் கூடியவர்கள் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1800 பேர் குணமடைந்தனர். கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொடர்பான மத்திய அரசு அறிக்கை:
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 686 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 20,219 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.05 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,800 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,75,135 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 3,641 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தினசரி பாதிப்பு விகிதம் 6.12% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.45% .இதுவரை மொத்தம் 92.18 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 59,512 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications