உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 4,525 பேர் மரணம்
டெல்லி: உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனாவால் 4,525 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2,67,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,48,79,476. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 14,38,04,269. கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 34,18,041.

பாதிப்பில் சற்று குறைவு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்தைத் தாண்டியதாக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2.61 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,67,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதி உச்ச மரணங்கள்
அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா மரணங்கள் 4,000-த்தை தாண்டியதாக உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதி உச்சமாக 4,525 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் மிக அதிகம்
அமெரிக்காவில் கடந்த ஜனவரி 12-ந் தேதியன்று 4,468 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்ததுதான் இதுவரை அதிகபட்சமான மரணங்கள் எண்ணிக்கை. இதற்கு அடுத்ததாக பிரேசிலில் ஏப்ரல் 6-ந் தேதியன்று 4,211 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் உலக நாடுகளிலேயே மிக அதிக அளவிலான ஒருநாள் மரணங்கள் நேற்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

மகாராஷ்டிராவில் 1,291 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகபட்சமாக 1,291 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் நேற்று 525 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையன்று 364 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு அதிகம்
அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே உள்ளது. செவ்வாய்க்கிழமையன்று 28,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 33,059 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications