இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு விவரம்:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50,129 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,68,511 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள்
24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
மேலும் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 62,077 ஆகவும் அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 70,78,123. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,68,154 மட்டும். மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் இந்தியா
உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

உலக அளவில் குணமடைந்தோர் பட்டியலில் முதலிடம்
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்திலும் பிரேசில் 3-வது இடத்திலும் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலியில் மீண்டும் கொரோனா 2-வது அலை தாக்கம் நீடித்து வருகிறது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications