கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 24,963 பேர் வீடு திரும்பினர் - குணமடைந்தோர் விகிதம் 97.96%
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24,963 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 2,40,221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 24,963 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப்போது ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 21,257 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38,94,312ல் இருந்து 3,39,15,569 ஆக உயர்ந்து உள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறைவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் 24,963 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை 3,32,00,258ல் இருந்து, 3,32,25,221 ஆக உயர்வடைந்து உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவீதம் ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நாட்டில் ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,50,127 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதம் ஆக உள்ளது. நாடு முழுவதும் 2,40,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 2,44,198 பேராக இருந்தது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கெரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. அதனை பரவலாக்கும் புதிய கட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 93,17,17,191 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 50,17,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications