இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,71,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 314 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை பல மாநிலங்களிலும் கடும் பாதிப்பை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2,71,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 7,743 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமையை விட இது 28.17% அதிகமாகும்.
Recommended Video
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,38,331 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,50,85,721. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 15,50,377. கடந்த 24 மணிநேரத்தில் 16,65,404 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 314 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications