இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பின் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா
டெல்லி: இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பின்னர் நேற்று மட்டும் 3,17,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 491 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 339,475,322. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,583,786. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 272,911,132.

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,63,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் இந்தியாவில் மட்டும் 3,17,532 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,218,773 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 491 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிகை 487,717 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் நேற்று மட்டும் 223,990 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 2,23,990 பேர் கொரோனாவால் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,807,029.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 19,24,051.












Click it and Unblock the Notifications